×

மரண பயம் நீக்கும்… வாழ்வு தரும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்!

நோயுற்றோர் உடல் நலம் பெற மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்ல வேண்டும். இந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் என்பது ரிக் வேதத்தின் ஏழாவது மண்டலத்தில் உள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தைத் தினமும் 108 முறை சொல்லி பிரார்த்தனை செய்து வந்தால் நோய், மரண பயம் அவர்களை விட்டு நீங்கும் என்பது ஐதீகம்! மந்திரம்: ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்! விளக்கம்: இயற்கையாகவே
 

நோயுற்றோர் உடல் நலம் பெற மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்ல வேண்டும். இந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் என்பது ரிக் வேதத்தின் ஏழாவது மண்டலத்தில் உள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தைத் தினமும் 108 முறை சொல்லி பிரார்த்தனை செய்து வந்தால் நோய், மரண பயம் அவர்களை விட்டு நீங்கும் என்பது ஐதீகம்!

மந்திரம்:

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்

உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்!

விளக்கம்:

இயற்கையாகவே நறுமணம் கமழ்பவரும், அடியவர்களுக்குக் கருணையை ஊட்டி வளர்பவருமான முக்கண் கொண்ட சிவபெருமானே, காம்பிலிருந்து வெள்ளரிப்பழம் எப்படி எந்த வலியுமின்றி விடுபடுகிறதோ அது போல மரணத்தின் பிடியிலிருந்து என்னை விடுவிக்க வேண்டுகிறேன்.