×

மனைவியை பார்க்க மருத்துவமனை சென்றவர், பக்கத்திலிருந்த பெண் நோயாளியிடம் சில்மிஷம்! சிறையில் தவிக்கும் 78 வயசு தாத்தா! 

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண்கள் உலகம் முழுக்கவே இருக்க செய்கிறார்கள் என்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால், 78 வயதைக் கடந்த முதியவர் ஒருவர், தனது மனைவியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றிருந்த போது, அருகிலிருந்த பெண் நோயாளியிடம் சில்மிஷம் செய்ததை அதிர்ச்சியுடன் சொல்கிறார்கள் மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள். கடந்த ஜனவரி மாதம், ஓய்வுபெற்ற 78 வயதான லா லோய் ஃபாட் என்ற முதியவர், இரண்டு முறை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மனைவியைப் பார்க்க நர்சிங் ஹோமுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில்,
 

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண்கள் உலகம் முழுக்கவே இருக்க செய்கிறார்கள் என்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால், 78 வயதைக் கடந்த முதியவர் ஒருவர், தனது மனைவியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றிருந்த போது, அருகிலிருந்த பெண் நோயாளியிடம் சில்மிஷம் செய்ததை அதிர்ச்சியுடன் சொல்கிறார்கள் மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள்.

கடந்த ஜனவரி மாதம், ஓய்வுபெற்ற 78 வயதான லா லோய் ஃபாட் என்ற முதியவர், இரண்டு முறை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மனைவியைப் பார்க்க நர்சிங் ஹோமுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், அவர் மனைவியை சந்தித்து பேசிய போது அருகில் பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் தனியாக அமர்ந்திருப்பதை அவர் கவனித்துள்ளார், என்று துணை அரசு வக்கீல் டான் யென் சியோ தெரிவித்தார்.

வக்கீல் டான் அவர்கள் கூறுகையில்: “பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இந்த பெண்மணி ‘உடல்நிலை சரியில்லாமல்’ இருப்பதாகவும், இரு கைகளும் கட்டுப்போடப்பட்டு இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட 37 வயதான பெண்ணுக்கு பெருமூளை வாதம் உள்ளது, மேலும் அந்த பெண்ணினால் பேசுவதற்கும், தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதும் சிரமம். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மார்பைச் சுற்றி ஒரு கரப்பான் பூச்சி பறப்பதைக் கவனித்த லாவ், அதைத் தூக்கி எறியும் நோக்குடன் அந்த பெண்மணியை நெருங்கி உள்ளார். 

பெண்ணின் ஆடை தளர்வாகவும், மார்பு ஓரளவு வெளிப்படுவதையும் லாவ் கவனித்துள்ளார். அந்த பெண் உள்ளாடை அணியவில்லை.  இதனை கவனித்த லாவ், அந்த பெண்ணின் சட்டைக்குள் கையை வைத்து சுமார் 10 விநாடிகள் தவறாக நடந்துகொண்டுள்ளார். இதை கண்ட உதவியாளர், என்ன செய்றீங்க? என்று லாவிடம் கேட்டார். உடனே சுதாரித்து கொண்ட லாவ், பதில் சொல்லாமல் நர்சிங் ஹோமில் இருந்து வெளியேறினார். இதையடுத்து அந்த மருத்துவமனை செவிலியர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரையடுத்து விசாரணை செய்த காவல்துறையினர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக லாவிற்கு 8 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சிறையில் அடைத்தனர்.