×

மணிகண்டனுக்கு முன் ஜாமீன் கூடாது – காவல்துறை

பாலியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாகவும், காவலில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் முன் ஜாமீன் தரக்கூடாது என்றும் காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் கட்டாயப்படுத்தி கரு கலைப்பு செய்ததாகவும் மலோசியாவை சேர்ந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் அவரின் நண்பர் பரணி ஆகியோருக்கு எதிராக
 

பாலியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாகவும், காவலில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் முன் ஜாமீன் தரக்கூடாது என்றும் காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் கட்டாயப்படுத்தி கரு கலைப்பு செய்ததாகவும் மலோசியாவை சேர்ந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் அவரின் நண்பர் பரணி ஆகியோருக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என புகார் அளித்த பெண் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜூன் 9ஆம் தேதி வரை மணிகண்டனை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரின் முன் ஜாமீன் மனு, நீதிபதி அப்துல்குத்தூஸ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் அமைச்சர் 12 ஆண்டுகள் அரசு மருத்துவராக பணியாற்றி, பின் அரசியலுக்குள் நுழைந்துள்ளார். புகாரில் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை பொறுத்தவரை திருமணமானவர் என தெரிந்து தான் அவருடன் புகார் அளித்த பெண் குடும்பம் நடத்தியுள்ளதாக கூறினார். மனுதரார் சம்மந்தப்பட்ட புகார் அளித்தபெண்ணை காயப்படுத்தியதாக கூறுவதற்கு எந்த மருத்துவ ஆதாரங்களும் இல்லை. புகார் அளித்த பெண்ணை நடிகையை தெரியும் எனவும், மற்றபடி அவர் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் மனுதரார் புகழக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். எங்கள் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார். ஆனால் பாதுகாப்பிற்காக இடைக்கால முன் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். மேலும் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், முன்னாள் அமைச்சர் புகார் அளித்த பெண்ணிடம் அறிமுகம் ஆன மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்டுள்ளது. கரு உருவாகும் முன் எப்படி கருக்கலைப்பு செய்ய முடியும். கருவுக்கு யார் காரணம் என கண்டுபிடிக்க வேண்டும். காவல் துறை விசாரிக்கட்டும், குற்றவாளி என்பதற்கு முகாந்திரம் இருந்தால் கைது செய்யட்டும். திருமணமாகாதவன் என்று அவரிடம் கூறவில்லை. அது அவருக்கும் தெரியும். அதனால் அவரை நம்ப வைத்து ஏமாற்றியதாக கூற முடியாது. புகார் அளித்த பெண்ணுக்கு எந்த மிரட்டலும் விடுக்கவில்லை. ஏப்ரல் 15 வரை மணிகண்டனுடன் வசித்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் தரப்பு விளக்கம் அளிக்க காவல்துறை அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். ஆரம்பகட்ட விசாரணை முறையாக நடத்தியிருக்க வேண்டும் என மணிகண்டன் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2017ல் பரணி என்பவர் மூலம் மணிகண்டனுக்கு புகார் அளித்த பெண் ((நடிகை சாந்தினி)) அறிமுகம் ஆகியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி, மணிகண்டன் ஏமாற்றியுள்ளார். கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார். தற்போது விசாரானை ஆரம்பநிலையில் உள்ளது. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. புகார் அளித்த பெண் மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மூன்று முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகள் விசாரிக்க வேண்டியுள்ளது. ஆதாரங்கள் சேகரிக்க வேண்டியுள்ளது. முக்கிய பதவியை வகித்ததால் சாட்சிகளை கலைக்க கூடும் என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.