×

மணப்பெண் கோலத்தில் காட்சித்தரும் பார்வதி | புதிதாக திருமணமானவர்கள் செல்ல வேண்டிய தலம்.

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கயிலையில் திருமணம் நடைபெறும் சமயம், எல்லா தெய்வங்களும் கயிலாயத்தில் குவிந்ததால் பாரத்தை தாங்க முடியாமல் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதை சமன்படுத்த எண்ணிய சிவபெருமான், அகத்தியரை தென்திசை நோக்கி செல்லுமாறு கூறிய வரலாறு எல்லாம் உங்களுக்கு தெரியும் தானே? சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கயிலையில் திருமணம் நடைபெறும் சமயம், எல்லா தெய்வங்களும் கயிலாயத்தில் குவிந்ததால் பாரத்தை தாங்க முடியாமல் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதை சமன்படுத்த எண்ணிய சிவபெருமான், அகத்தியரை
 

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கயிலையில் திருமணம் நடைபெறும் சமயம், எல்லா தெய்வங்களும் கயிலாயத்தில் குவிந்ததால் பாரத்தை தாங்க முடியாமல் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதை சமன்படுத்த எண்ணிய சிவபெருமான், அகத்தியரை தென்திசை நோக்கி செல்லுமாறு கூறிய வரலாறு எல்லாம் உங்களுக்கு தெரியும் தானே?

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கயிலையில் திருமணம் நடைபெறும் சமயம், எல்லா தெய்வங்களும் கயிலாயத்தில் குவிந்ததால் பாரத்தை தாங்க முடியாமல் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதை சமன்படுத்த எண்ணிய சிவபெருமான், அகத்தியரை தென்திசை நோக்கி செல்லுமாறு கூறிய வரலாறு எல்லாம் உங்களுக்கு தெரியும் தானே?

அகத்தியர் அப்படி தென்திசை நோக்கி பயணம் செய்த சமயத்தில், சிவபெருமானின் திருமணத்தைப் பார்க்க முடியவில்லையே என்று ஏங்கிக் கொண்டே பயணமானார். அப்போது, பாபநாசத்தில் மணக்கோலத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் அகத்தியருக்கு காட்சியளித்தனர்.  மிகவும் மகிழ்ந்த அகத்தியர், வயல்வெளிகளால் சூழப்பட்ட நெல்லையில் மணக்கோலத்தில் காட்சி தந்த சிவபெருமானும் பார்வதியும் தங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 
இறைவனும் அகத்தியரின் அந்தக் கோரிக்கையை ஏற்றார். அந்தக் கோவில் பஞ்ச சபைகளில் ஒன்றாக திகழ்கிறது. பஞ்ச சபைகளில் இது தாமிர சபையாகவும் விளங்குகிறது. இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் அம்பாளுக்கு காந்திமதி என்று பெயர். காந்தி என்றால் ஒளி என்று பொருள், அம்பிகையின் முகம் ஒளிமிக்கதாய் இருப்பதால் இதற்கு காந்தி பீடம் என்றும் சொல்வார்கள். 
திருமணம் முடிந்ததும் மணக்கோலத்தில் காட்சி தந்ததால் அம்பாளின் முகத்தில் மணப்பெண்ணுக்குரிய வசிகரம் இன்றும் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு.  புதுமணத் தம்பதிகள் இக்கோயிலில் வழிபாடு மேற்கொண்டால் தங்களது வாழ்க்கை பிரகாசமாக அமையும் என்பதால், மணமான கோலத்தில் புதுமணத் தம்பதியினர் இக்கோயிலுக்கு வந்துச் செல்கின்றனர்.