×

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் அடிக்கடி இதுபோன்று தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்கின்றனர். அப்பகுதி மக்கள். இன்று ஏற்பட்ட தகராறின்போது, அவரது மனைவி சுமதி கணவனை கீழே தள்ளிவிட்டு தலைமீது கல்லை போட்டதாக தெரிகிறது. இதில் சுந்தரவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு
 

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது.

பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் அடிக்கடி இதுபோன்று தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்கின்றனர். அப்பகுதி மக்கள். இன்று ஏற்பட்ட தகராறின்போது, அவரது மனைவி சுமதி கணவனை கீழே தள்ளிவிட்டு தலைமீது கல்லை போட்டதாக தெரிகிறது. இதில் சுந்தரவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். குற்றத்தை அவரது மனைவி சுமதி ஒப்புக்கொண்டதால் அவரையும்  கைது செய்தனர். தந்தை இறந்ததாலும், தாய் கைது செய்யப்பட்டதாலும் அத்தம்பதியினருக்கு பிறந்த 3 குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.