போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை- ராமதாஸ்
போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சமீப காலமாக இளைஞர்களிடையே போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோவையில் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைவிட, சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. போதைப்பொருள் பழக்கத்திலிருந்து இளைஞர்களை விடுவிக்க வேண்டும். உடனடியாக, தமிழக அரசும், காவல்துறையும்
Jul 11, 2021, 04:53 IST
போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சமீப காலமாக இளைஞர்களிடையே போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோவையில் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைவிட, சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
போதைப்பொருள் பழக்கத்திலிருந்து இளைஞர்களை விடுவிக்க வேண்டும். உடனடியாக, தமிழக அரசும், காவல்துறையும் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.