×

புதுச்சேரி மணக்குள விநாயகரின் அதி அற்புதங்கள்!

புதுச்சேரியில், வங்கக் கடலை ஒட்டி கிழக்கு நோக்கி அமைந்து இருக்கிற மணக்குள விநாயகர் ஆலயம். ஆதியில் இந்த கோயில் பவனேஸ்வர் விநாயகர் ஆலயம் என்று அழைக்கப்பட்டு, தற்போது மணக்குள விநாயகர் கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறாது. 8,000 சதுர அடி பரப்பில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தக் கோயில், புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டினர் குடியேறுவதற்கு முன்பிருந்தே இந்தக் கோயில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான ஆலயமான
 

புதுச்சேரியில், வங்கக் கடலை ஒட்டி கிழக்கு நோக்கி அமைந்து இருக்கிற மணக்குள விநாயகர் ஆலயம். ஆதியில் இந்த கோயில் பவனேஸ்வர் விநாயகர் ஆலயம் என்று அழைக்கப்பட்டு, தற்போது மணக்குள விநாயகர் கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறாது. 8,000 சதுர அடி பரப்பில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தக் கோயில், புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டினர் குடியேறுவதற்கு முன்பிருந்தே இந்தக் கோயில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான ஆலயமான இங்கு வீற்றீருக்கும் விநாயகரை புதுச்சேரி மக்கள் வெள்ளைக்காரன் விநாயகர் என்று தான் அழைக்கின்றனர்.
இந்தக் கோயிலை இடிப்பதற்கு பல முறை பிரான்ஸ் தூதர்கள் முயன்றார்கள் என்று கூறப்படுவது உண்டு. ஒவ்வொரு முறையும் உள்ளூர் மக்கள் இந்தக் கோயிலை காப்பாற்றி வந்துள்ளனர்.

இந்த ஆலயத்தில் 18 அடி உயர தங்கத் தகடு வேயப்பட்ட கொடிக் கம்பம் நாட்டப்பட்டுள்ளது. இது இந்தக் கோயிலின் சிறப்புக்களில் ஒன்று. கோயிலின் வெளிப்புறச் சுவற்றில் பல்வேறு விதமான விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தங்க விமானம் இந்தக் கோயிலின் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில், விநாயகர் சித்தி, புத்திகளுடன் கிழக்குப் பார்த்து அமர்ந்து இருக்கிறார். கோயிலுக்கு தங்க ரதம் உள்ளது. மரத்தினால் ஆன ரதம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. ரதத்திற்கு 7.5 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகையின் போது இந்த ரதம் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். கோயிலில் நர்த்தன விநாயகரும் இடம் பெற்றுள்ளார். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் அருகே தொல்லைகாது சித்தர் சமாதி அடைந்துள்ளார். ஆலயத்திற்கு சென்று திரும்புகையில் மறக்காமல் தொல்லைகாது சித்தர் சமாதிக்கும் சென்று வாருங்கள். அருகிலேயே ஸ்ரீ அரவிந்தர் அன்னை ஆசிரமும் இருக்கிறது.

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி மிகவும் விசேஷமானது.

கோயில் திறந்து இருக்கும் நேரம்: காலை 5.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை.