×

பிரிட்ஜின் மேல் கொசுவத்தி ஏற்றி வைத்து உறங்கிய முதியவர்… வெடித்துச் சிதறியதால் பரிதாப பலி!

பக்கிரிசாமி எப்போதுமே அவரது வீட்டில் உள்ளே பிரிட்ஜ் இணைப்பைத் துண்டித்து விட்டு அதன் அருகிலேயே படுத்து உறங்குவாராம். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மணவாளன் பேட்டை என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் பக்கிரிசாமி(82). இவர் அவரது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். பக்கிரிசாமி எப்போதுமே அவரது வீட்டில் உள்ளே பிரிட்ஜ் இணைப்பைத் துண்டித்து விட்டு அதன் அருகிலேயே படுத்து உறங்குவாராம். அவரது மகனும், மனைவியும் வேறு இடத்தில் உறங்குவார்களாம். அதே போல, நேற்று இரவும்
 

பக்கிரிசாமி எப்போதுமே அவரது வீட்டில் உள்ளே பிரிட்ஜ் இணைப்பைத் துண்டித்து விட்டு அதன் அருகிலேயே படுத்து உறங்குவாராம்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மணவாளன் பேட்டை என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் பக்கிரிசாமி(82). இவர் அவரது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். பக்கிரிசாமி எப்போதுமே அவரது வீட்டில் உள்ளே பிரிட்ஜ் இணைப்பைத் துண்டித்து விட்டு அதன் அருகிலேயே படுத்து உறங்குவாராம். அவரது மகனும், மனைவியும் வேறு இடத்தில் உறங்குவார்களாம். அதே போல, நேற்று இரவும் பிரிட்ஜின் அருகில் படுத்து உறங்கியுள்ளார். இதனிடையே நேற்று இரவு கொசுவத்தியை,  பிரிட்ஜின் மேலே ஏற்றி வைத்துள்ளார். 

அவர் உறங்கிய சிறிது நேரத்திலேயே கொசுவத்தியில் இருந்த நெருப்பு பிரிட்ஜூக்கு மேல் இருந்த துணி மீது விழுந்து, துணி முழுவதும் தீ பிடித்துள்ளது. அதனை அறியாமல் பக்கிரிசாமி தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அந்த துணியின் மீதிருந்த நெருப்பு பிரிட்ஜின் ஒயர்களிலும் பரவ, பிரிட்ஜ் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்தில் அங்கு உறங்கிக் கொண்டிருந்த பக்கிரிசாமி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்து போலீசார், பக்கிரிசாமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.