×

பணியில் சேர்ந்த முதல் நாளே நடந்த கொடூரம்: 8வது மாடியில் இருந்து விழுந்து இளம்பெண் உயிரிழப்பு!

முதல் நாளே இரவு பணியிலிருந்த அவர் நிறுவனத்தின் 8வது மாடியிலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை: பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே பெண் ஐடி ஊழியர் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த டெனிதா ஜீலியஸ். இவர் சென்னை அம்பத்தூர் உள்ள ஐடி நிறுவனத்தில் தேர்வாகி நேற்று பணியில் சேர்ந்தார். முதல் நாளே இரவு பணியிலிருந்த அவர் நிறுவனத்தின் 8வது மாடியிலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு
 

முதல் நாளே இரவு பணியிலிருந்த அவர்  நிறுவனத்தின் 8வது மாடியிலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை: பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே பெண் ஐடி ஊழியர்  மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த டெனிதா ஜீலியஸ். இவர் சென்னை அம்பத்தூர் உள்ள ஐடி நிறுவனத்தில் தேர்வாகி நேற்று பணியில் சேர்ந்தார். முதல் நாளே இரவு பணியிலிருந்த அவர்  நிறுவனத்தின் 8வது மாடியிலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டெனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே  திருச்சியில் உள்ள டெனிதா ஜீலியஸின் பெற்றோருக்கு காவல்துறை தகவல் கொடுத்தது. 

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், டெனிதா  தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.