×

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்… சமாளித்து பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர்!

, நீட் தேர்வை மத்திய அரசு தான் நடத்துகிறது. அதனால் தேசிய தேர்வு ஆணையம் தான் நீட் தேர்வு ஆள் மாறாட்டத்திற்கு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆள் மாறாட்டத்திற்கு தமிழக அரசு காரணம் இல்லை சில நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வில் உதித் சூர்யா என்ற நபர், மும்பையை சேர்ந்த வேறு ஒரு நபரை விட்டு, தேர்வெழுத வைத்து சான்றிதழ் சரிபார்ப்பின் போதும் தேர்வெழுதியவரே கலந்து கொண்ட நிலையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி
 

, நீட் தேர்வை மத்திய அரசு தான் நடத்துகிறது. அதனால் தேசிய தேர்வு ஆணையம் தான் நீட் தேர்வு ஆள் மாறாட்டத்திற்கு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆள் மாறாட்டத்திற்கு தமிழக அரசு காரணம் இல்லை

சில நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வில் உதித் சூர்யா என்ற நபர், மும்பையை சேர்ந்த வேறு ஒரு நபரை விட்டு,  தேர்வெழுத வைத்து சான்றிதழ் சரிபார்ப்பின் போதும் தேர்வெழுதியவரே கலந்து கொண்ட நிலையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வகுப்புகள் ஆரம்பித்த போது உதித் சூர்யா கலந்து கொண்டுள்ளார். மருத்துவ தேர்வில் நடந்த இந்த ஆள் மாறாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இது குறித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், நீட் தேர்வை மத்திய அரசு தான் நடத்துகிறது. அதனால் தேசிய தேர்வு ஆணையம் தான் நீட் தேர்வு ஆள் மாறாட்டத்திற்கு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆள் மாறாட்டத்திற்கு தமிழக அரசு காரணம் இல்லை என்றும் கூறியுள்ளார். 

மேலும், அசோக் கிருஷ்ணா என்பவர் மின்னஞ்சல் மூலம் இந்த ஆள் மாறாட்டத்தைப் பற்றி தெரிய படுத்தியதாக கூறப்பட்டது. தற்போது அந்த பெயரில் யாரும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாகவும் காவல் துறை அதை பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன