×

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் பவனியுடன் நிறைவு

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா சண்டிகேஸ்வரர் பவனியுடன் நிறைவு பெற்றது. திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த வாரம் 23 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றபட்டது. அதனையடுத்து மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது 5 அடி உயரம், 40 அங்குலம் விட்டத்துடன் 200 கிலோ எடை கொண்ட மகா தீபக் கொப்பரையில்
 

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா சண்டிகேஸ்வரர் பவனியுடன் நிறைவு பெற்றது.

திருவண்ணாமலை:  

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த வாரம் 23 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றபட்டது.

அதனையடுத்து மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது 5 அடி உயரம், 40 அங்குலம் விட்டத்துடன் 200 கிலோ எடை கொண்ட மகா தீபக் கொப்பரையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற தீபத்திருவிழாவின் உற்வசத்தின் நிறைவாக 3 நாட்கள் எல்லை காவல் தெய்வ வழிபாடும், ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்து முடிந்தது. தீபத்திருவிழாவின் நிறைவாக, நேற்று முன்தினம் இரவு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது.

அதையொட்டி அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.

நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பஞ்சமூர்த்திகளில் ஒருவரான சண்டிகேஸ்வரர் அலங்கார ரூபத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் பவனி வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.