×

தமிழகம் முழுவதும் 18 மாவட்டங்களின் சிஇஓக்கள் திடீர் பணியிட மாற்றம்- பள்ளிக் கல்வித்துறை அதிரடி

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை தொடக்கக் கல்வி இயக்கம் அலுவலகத்தில் துணை இயக்குநராக பணியாற்றும் அறிவழகன் திருச்சி முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் நாகை, இராமநாதபுரம், காஞ்சிபுரம், சென்னை, அரியலூர், திருவாரூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர், தேனி, திருநெல்வேலி,
 

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னை தொடக்கக் கல்வி இயக்கம் அலுவலகத்தில் துணை இயக்குநராக பணியாற்றும் அறிவழகன் திருச்சி முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் நாகை, இராமநாதபுரம், காஞ்சிபுரம், சென்னை, அரியலூர், திருவாரூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 18 மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றியவர்கள் வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.