தமிழகத்தில் மேலும் 508 பேருக்கு கொரோனா! மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது!!
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 36லட்சமாக அதிகரித்துள்ளது. இரண்டு லட்சத்து 53ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 3,550பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 508 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டும் இன்று 278 போ் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 3550லிருந்து 4058 ஆக உயா்ந்துள்ளது. 32-ஆக அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளது.