×

தமிழகத்தில் மேலும் 104பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு ஆக 2,162அதிகரிப்பு…

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31லட்சத்தை கடந்துள்ளது. இரண்டு லட்சம் 10 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 2,058பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,162ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கோவிட்-19
 

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31லட்சத்தை கடந்துள்ளது. இரண்டு லட்சம் 10 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 2,058பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மேலும் 104  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  2,162ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கோவிட்-19 க்கான ரத்த பரிசோதனை இன்று மட்டும் 7,886 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இதுவரை 1,210-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 82-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தமிழகத்தில் கோவிட்-19 க்கான ரத்த பரிசோதனை இதுவரை 1,09,961 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.தற்போது வரை கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 922 ஆக உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.