×

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு!

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்களும், தினக்கூலி பெறும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்களின் ஏழ்மையை குறைக்கும் பொருட்டு தமிழக அரசு ரூ.1000 பணமும், ரேஷன் உணவு பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன் படி மக்களுக்கு நிவாரண பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் இந்த ஊரடங்கு உத்தரவு
 

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்களும், தினக்கூலி பெறும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்களின் ஏழ்மையை குறைக்கும் பொருட்டு தமிழக அரசு ரூ.1000 பணமும், ரேஷன் உணவு பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன் படி மக்களுக்கு நிவாரண பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது. 

தமிழகத்தில் இந்த ஊரடங்கு உத்தரவு இன்னும் நீட்டிக்க படுமா… இல்லையா என்று மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்தது . ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பேசிய முதல்வர், மத்திய அரசின் முடிவை பொறுத்தே ஊரடங்கு நீடிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், முதல்வர் சுயமாக முடிவு எடுக்க மாட்டாரா என்று கடும் விமர்சனத்தை தெரிவித்து வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை 30 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், தற்போது இருக்கும் அனைத்து கட்டப்பாடுகளும் 31 ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவித்திருக்கிறார்.