×

தன்னார்வலர்கள் இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும்: சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்!

அந்த பகுதிகளில் தன்னார்வலர்கள் உணவு வழங்கத் தடை விதித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அதிக அளவு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியாக சென்னை உள்ளது. அதனால் சென்னையில் பல்வேறு பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் தன்னார்வலர்கள் உணவு வழங்கத் தடை விதித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி தடை செய்யப்பட்ட பகுதிகள், அரசு மருத்துவமனைகள், கொரோனா பரிசோதனை
 

அந்த பகுதிகளில் தன்னார்வலர்கள் உணவு வழங்கத் தடை விதித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் அதிக அளவு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியாக சென்னை உள்ளது. அதனால் சென்னையில் பல்வேறு பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் தன்னார்வலர்கள் உணவு வழங்கத் தடை விதித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி தடை செய்யப்பட்ட பகுதிகள், அரசு மருத்துவமனைகள், கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளிட்ட இடங்கள் மற்றும் அதனை சுற்றி 2 கி.மீ தூரத்தில் தன்னார்வலர்கள் உணவு கொடுக்க தடை விதிக்கப் பட்டுள்ளதாகவும், அதனை தன்னார்வலர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் உணவு வழங்க விரும்புபவர்கள் மாநகராட்சியின் உணவு கிடங்குகளில் கொடுக்கலாம் என்றும் நிவாரண உதவி செய்வதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னர், தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், உணவு பொருட்கள் கொடுக்கும் வாகனங்களில் 3 பேருக்கு மேல் செல்ல கூடாது என்றும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.