×

தந்தையை அடித்து கொன்ற மகன்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

கன்னங்குறிச்சி அருகிலுள்ள தனக்கு சொந்தமான 60 சென்ட் நிலத்தை விற்க முயன்றுள்ளார். சேலம்: நிலத்தை விற்க முயன்ற தந்தையை அவரது மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருக்கு இரண்டு மனைவிகள். முனுசாமி தனது மனைவி சபிதாமணியுடன் வசித்து வந்துள்ளார். இவர் கன்னங்குறிச்சி அருகிலுள்ள தனக்கு சொந்தமான 60 சென்ட் நிலத்தை விற்க முயன்றுள்ளார். இதை அறிந்த அவரது இளைய மகன் தாமோதரன் முனுசாமியிடம் எதற்காக நிலத்தை விற்க
 

கன்னங்குறிச்சி  அருகிலுள்ள தனக்கு சொந்தமான 60 சென்ட் நிலத்தை விற்க முயன்றுள்ளார்.

சேலம்: நிலத்தை விற்க முயன்ற தந்தையை அவரது மகனே  அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் அருகே அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர்  முனுசாமி. இவருக்கு இரண்டு மனைவிகள். முனுசாமி  தனது மனைவி சபிதாமணியுடன் வசித்து வந்துள்ளார். இவர் கன்னங்குறிச்சி  அருகிலுள்ள தனக்கு சொந்தமான 60 சென்ட் நிலத்தை விற்க முயன்றுள்ளார். இதை அறிந்த அவரது இளைய மகன் தாமோதரன் முனுசாமியிடம் எதற்காக நிலத்தை விற்க போகிறீர்கள் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். 

ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே தகராறு முற்றவே, தாமோதரன் கீழே கிடந்த கல்லை எடுத்து வந்து முனுசாமியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் முனுசாமியின் தலையில் பலத்த அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய தாமோதரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.