×

தந்தைக்கு வீட்டுக்குள்ளேயே சமாதி கட்டிய மகன்!

பெரம்பலூரில் இறந்துபோன தந்தைக்கு வீட்டுக்குள்ளேயே மகன் சமாதி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதியவரான ராமசாமி, உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். தந்தை மீது அலாதி பிரியம் கொண்ட அவரது மகன் தந்தையின் உடலை வீட்டு வாசலிலுள்ள தென்னை மரத்தடியிலேயே புதைத்துள்ளார். இதற்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டுக்குள்ளேயே தந்தையின் சடலத்தை வைத்து கான்கிரீட் சுவர் கட்டினார். இதனையறிந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
 

பெரம்பலூரில் இறந்துபோன தந்தைக்கு வீட்டுக்குள்ளேயே மகன் சமாதி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதியவரான ராமசாமி, உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். தந்தை மீது அலாதி பிரியம் கொண்ட அவரது மகன் தந்தையின் உடலை வீட்டு வாசலிலுள்ள தென்னை மரத்தடியிலேயே புதைத்துள்ளார். இதற்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டுக்குள்ளேயே தந்தையின் சடலத்தை வைத்து கான்கிரீட் சுவர் கட்டினார்.

இதனையறிந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர், மகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது தந்தையின் ஆசையை நிறைவேற்றவே தாம் இவ்வாறு செய்ததாக மகன் தெரிவித்துள்ளார். இதனை ஏற்க மறுத்த காவல்துறையினர் முதியவரின் சடலத்தை அகற்றி மயானத்திற்கு சென்று ஒருவழியாக தகனம் செய்தனர்.