×

டிக் டாக் தோழியிடம் வினிதா கொடுத்த நகை மாயம்… குழப்பத்தில் போலீஸ்!

, அபியுடன் சேர்ந்து தான் அந்த நகைகளை எடுத்துக் கொண்டு சென்று விட்டதாக, வினிதாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். டிக் டாக் என்ற செயலி மூலம் திரைப்படப் பாடல்களுக்கும், வசனங்களுக்கும் உணர்ச்சிப் பூர்வமாக நடித்து அதனைத் தனது டிக் டாக் பக்கத்தில் வெளியிடுவது கடந்த சில மாதங்களாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதை, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து வயதினரும் உபயோகித்து வருகின்றனர். டிக் டாக்கில் வினிதா என்பவர் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.
 

, அபியுடன் சேர்ந்து தான் அந்த நகைகளை எடுத்துக் கொண்டு சென்று விட்டதாக, வினிதாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

டிக் டாக் என்ற செயலி மூலம் திரைப்படப் பாடல்களுக்கும், வசனங்களுக்கும்  உணர்ச்சிப் பூர்வமாக நடித்து அதனைத் தனது டிக் டாக் பக்கத்தில் வெளியிடுவது கடந்த சில மாதங்களாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதை, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து வயதினரும் உபயோகித்து வருகின்றனர். 

டிக் டாக்கில் வினிதா என்பவர் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி 45 நாட்களில் இவரது கணவர் சிங்கப்பூர் சென்று விட்டார். அதன் பின், தனிமைப் படுத்தப் பட்ட அவர் டிக் டாக் மூலம் கிடைத்த நண்பர்களிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளார். குறிப்பாக, அபி என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.  சில நாட்களுக்கு முன்னர் வினிதா வீட்டிலிருந்த 20 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். 

வினிதா, அபியுடன் சேர்ந்து தான் அந்த நகைகளை எடுத்துக் கொண்டு சென்று விட்டதாக, வினிதாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வினிதாவின் தோழி அபியிடம் விசாரணை மேற்கொண்ட போது. அதில், வினிதா தன்னிடம் எந்த நகையையும் தரவில்லை என்று அபி கூறியுள்ளார். இருப்பினும், தொடர்ந்து இருவரிடமும் விசாரணையை தொடர்ந்து வருவது குறிப்பிடத் தக்கது.