×

சுபஸ்ரீ இறப்புக்கு காரணமான ஜெயகோபால்… வசமாக சிக்குகிறார்!

சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான, பேனர் வைத்த ஜெயகோபால் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது காவல் துறை. சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான, பேனர் வைத்த ஜெயகோபால் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது காவல் துறை. சென்னை, பள்ளிக்கரணை அருகே பேனர் தவறி விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த இழப்பையடுத்து உயர் நீதி மன்றம் பேனர் வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. அ.தி.மு.க கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஜெய்கோபால்
 

சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான, பேனர் வைத்த ஜெயகோபால் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது காவல் துறை.

சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான, பேனர் வைத்த ஜெயகோபால் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது காவல் துறை.

சென்னை, பள்ளிக்கரணை அருகே பேனர் தவறி விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த இழப்பையடுத்து உயர் நீதி மன்றம் பேனர் வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. அ.தி.மு.க கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஜெய்கோபால் மீது ஒப்புதல் இல்லாமல் பேனர் வைத்ததற்காக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. 

இதனையடுத்து இன்று மீண்டும் ஜெயகோபால் மீது, மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்தவர் என்பதை  விவரிக்கும் சட்டப்பிரிவு 308 ன் கீழ் மீண்டும் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளது பரங்கிமலை காவல்துறை. மேலும், ஜெயகோபாலின் உறவினர் மேகநாதனும் அந்த குற்றத்தில் இணைந்ததால் வழக்கில் அவர் பெயரும் சேர்க்கப் பட்டுள்ள்ளது.