×

சாலையிலிருந்த பள்ளத்தால் நேர்ந்த விபத்து… தாய், மகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழப்பு!

இவர்களின் உறவினர் இறந்து விட்டதால், தடிக்காரங்கோணம் பகுதிக்கு நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள மார்த்தால் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் மேரி சுகிலா (43). இவரது மகன் அஜய் (17), அப்பகுதியில் உள்ள பள்ளியில் டிப்ளமோ படித்து வந்தார். இவர்களின் உறவினர் இறந்து விட்டதால், தடிக்காரங்கோணம் பகுதிக்கு நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளனர். இவர்கள் எட்டாமடை என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அவர்களுக்கு அருகில் டெம்போ ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.
 

இவர்களின் உறவினர் இறந்து விட்டதால், தடிக்காரங்கோணம் பகுதிக்கு நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள மார்த்தால் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் மேரி சுகிலா (43). இவரது மகன்  அஜய் (17), அப்பகுதியில் உள்ள பள்ளியில் டிப்ளமோ படித்து வந்தார். இவர்களின் உறவினர் இறந்து விட்டதால், தடிக்காரங்கோணம் பகுதிக்கு நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளனர். இவர்கள் எட்டாமடை என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அவர்களுக்கு அருகில் டெம்போ ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதனை அஜய் முந்திச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. 

அதே சமயத்தில் சாலையில் சாலையில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தை, வாகன ஓட்டிகள் அடையாளம் கண்டு கொள்வதற்காக டப்பா ஒன்று வைக்கப்பட்டிருந்துள்ளது. டெம்போவிற்கு முன்னால் செல்ல முயன்ற அஜய், அந்த டப்பாவில் மோதிக் கொள்ளாமல் இருப்பதற்காக பைக்கை திருப்பியுள்ளார். அப்போது, பைக் எதிர்பாராத விதமாக டெம்போவின் பின்புற சக்கரத்தின் அடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதனால் நிலைதடுமாறி  விழுந்த அஜய் மற்றும் மேரி சுகிலா சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.