×

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பரிகார பூஜைகளுக்கு பின் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பரிகார பூஜைகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. கேரளா : சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். இந்நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனைஅடுத்து இன்று காலை
 

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பரிகார பூஜைகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

கேரளா :

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனைஅடுத்து இன்று காலை கோயில் நடை அடைக்கப்பட்டது. பரிகார பூஜைக்கு பின் கோயில் நடை மீண்டும் இப்போது திறக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து சபரிமலைக்கு செல்ல அனைத்து வயது பெண்களும் முயன்றனர். ஆனால் பல்வேறு முறை முயன்றும் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.இதனால் அங்கு பதற்றம் நிலவி வந்தலால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் சபரிமலை செல்ல முயன்று திருபப்பி அனுப்பப்பட்ட இரண்டு பெண்கள் இன்று அதிகாலை 3.45 மணியளவில் சாமி தரிசனம் செய்தனர். இவர்கள் இரண்டு பேரும் எந்தவித முன்னறிவிப்பின்றி சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். 

 

இதனால் மேல்சாந்தியுடன் தந்திரி ஆலோசனை நடத்திய பிறகு சபரிமலை கோயில் நடை மூடப்பட்டது. தற்பொழுது பரிகார பூஜைகள்  செய்யப்பட்டு மீண்டும் நடை திறக்கப்பட்டுள்ளது . 

சபரிமலை கோயிலுக்குள் ஐம்பது வயதிற்கு உட்பட்ட இரண்டு பெண்கள் முதல் முறையாக தரிசனம் செய்து திரும்பியதை அடுத்து சபரிமலையினை சுற்றியுள்ள பகுதிகளில் பதட்டம் நிலவி வருகின்ற சூழ்நிலையில் சபரிமலை சன்னிதானம் செல்ல விரும்பும் பெண்களுக்கு பாதுகாப்பு தர போலீசுக்கு கேரள முதல்வர் உத்தவிட்டுள்ளார்.