×

கொரோனாவால் பலியான கட்சி நிர்வாகி :கமல் ஹாசன் இரங்கல்!

புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 70.கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். உயிரிழந்த சுப்ரமணியன் மூன்று முறை உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை திமுக எம்எல்ஏவாக இருந்தவர். இந்நிலையில் மக்கள் நீதி மய்ய நிர்வாகி கொரோனாவால் பலியான நிலையில் அவரின் மறைவுக்கு அக்கட்சியின் தமிழக தலைவர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “களத்தில் முன்னிற்கும்
 

புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 70.கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

உயிரிழந்த சுப்ரமணியன் மூன்று முறை உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை திமுக எம்எல்ஏவாக இருந்தவர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய நிர்வாகி கொரோனாவால் பலியான நிலையில் அவரின் மறைவுக்கு அக்கட்சியின் தமிழக தலைவர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “களத்தில் முன்னிற்கும் என் அன்பிற்கினிய நண்பரும், நம் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவருமான டாக்டர். M. A. S. சுப்பிரமணியன் அவர்களின் மறைவு நமக்கும் பேரிழப்பு. நம்பிக்கையின் மொழி பேசும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்கட்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளார்.