×

கொரோனா நேரத்தில் பட்டாகத்தியில் கேக் வெட்டிய நண்பர்கள்: அலேக்காக தூக்கிய போலீஸ்!

தற்போது சமூக விலகலை மீறி இளைஞர் கூட்டம் ஒன்று பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் வரும் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதன் காரணமாக வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். தற்போது சமூக விலகலை மீறி இளைஞர் கூட்டம் ஒன்று பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது. அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது பிறந்தநாளை
 

தற்போது சமூக விலகலை  மீறி  இளைஞர் கூட்டம் ஒன்று பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் வரும் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதன் காரணமாக வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.  தற்போது சமூக விலகலை  மீறி  இளைஞர் கூட்டம் ஒன்று பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது. 

அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது பிறந்தநாளை முன்னிட்டு   நண்பர்கள் சுந்தரமூர்த்தி, பாண்டியன், தமிழ், அழகன், கணபதி ஆகியோர் வீரபாண்டி கிராமம் ராஜபாளையம் தெருவில் ஒன்றுகூடி அமர்க்களப்படுத்தி உள்ளார்கள். அத்தோடு, மணிகண்டன் வித்தியாசமாக பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என பட்டா கத்தியால் கேக்கை வெட்ட செய்து அதை போட்டோ மற்றும் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். 

இந்த சம்பவம்  அரகண்டநல்லூர் போலீசார் கவனத்திற்கு செல்ல அவர்கள் உடனடியாக இதில் சம்மந்தபட்ட ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.