கொரோனா உறுதியான கர்ப்பிணிக்கு கொரோனா இல்லாத ஆண் குழந்தை பிறந்தது!
ஈரோடு பெருந்துறையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ், இந்தியாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 289பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியுள்ளது.