கொரனா தடுப்பு பணிக்காக தற்காலிகமாக 2100 சுகாதார பணியாளர்கள் நியமனம்!
கொரனா தடுப்பு பணிக்காக தற்காலிகமாக 2100 சுகாதார பணியாளர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. இதற்காக ரூ.75 கோடி ஒதுக்கி அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் பணிகளில் தற்காலிக சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் 2100 சுகாதார பணியாளர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.
May 20, 2021, 19:01 IST
கொரனா தடுப்பு பணிக்காக தற்காலிகமாக 2100 சுகாதார பணியாளர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. இதற்காக ரூ.75 கோடி ஒதுக்கி அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் பணிகளில் தற்காலிக சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் 2100 சுகாதார பணியாளர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.