×

கொட்டி தீர்க்கும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால் பல இடங்களில் மழை நீர் சாலைகளில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாகத் தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால் பல இடங்களில் மழை நீர் சாலைகளில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மழை
 

தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால் பல இடங்களில் மழை நீர்  சாலைகளில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

கனமழை காரணமாகத் தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை  துவங்கியுள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால் பல இடங்களில் மழை நீர்  சாலைகளில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இந்நிலையில் மழை காரணமாகக் கொடைக்கானல், தூத்துக்குடி, ராமநாதபுரம்,வேலூர் , சிவகங்கை, நெல்லை  ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.