×

குழந்தையின் படிப்பு செலவுக்கு பணம் கேட்ட மனைவி: குத்தி கொலை செய்த கணவர்!

கணவர் வீட்டிற்கு நேற்று மதியம் சென்ற அகிலா குழந்தையின் படிப்பு செலவுக்குப் பணம் கேட்டதாகத் தெரிகிறது. சென்னை : குழந்தையின் படிப்பு செலவிற்குப் பணம் கேட்ட மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நீலாங்கரை திருவள்ளுவர் நகரை சேர்ந்த தனசேகர், அகிலா என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணமாகி மூன்று மாதங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அகிலா சென்னை தரமணியில்
 

கணவர் வீட்டிற்கு நேற்று மதியம் சென்ற அகிலா குழந்தையின் படிப்பு செலவுக்குப் பணம் கேட்டதாகத் தெரிகிறது.

சென்னை : குழந்தையின் படிப்பு செலவிற்குப் பணம் கேட்ட மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை  நீலாங்கரை திருவள்ளுவர் நகரை சேர்ந்த  தனசேகர், அகிலா என்பவரை  கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். ஆனால்  திருமணமாகி மூன்று மாதங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  அகிலா சென்னை தரமணியில் உள்ள தனது அண்ணன் வீட்டில்  வசித்து வந்தார்.

 

இந்நிலையில் கணவர் வீட்டிற்கு நேற்று மதியம் சென்ற அகிலா குழந்தையின் படிப்பு செலவுக்குப் பணம் கேட்டதாகத் தெரிகிறது. இதில் கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தனசேகர் கத்தியை எடுத்து மனைவியின் தலை, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் அகிலா ரத்த வெள்ளத்தில் சரிந்து அங்கேயே உயிரிழந்தார். 

இதையடுத்து தனசேகர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த நீலாங்கரை போலீசார் அகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராய பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய தனசேகரை தேடி வருகின்றனர்.