×

குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கொடூர சம்பவம்..!

எங்கே பார்த்தாலும் குடும்பச் சூழலின் காரணமாகக் குழந்தைகளைக் கொள்ள முயல்வது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வறுமையால் குடும்பத்தைச் சமாளிக்க முடியாமல் போடிநாயக்கனூர் பகுதியில் 3 குழந்தைகளுடன் தானும் விஷம் அருந்திய தாய் ஒரு பக்கம், கடலூரில் குடும்பத் தகராறில் காரணமாகத் தனது மூன்று குழந்தைகளையும் கால்வாயில் வீசி தற்கொலை செய்ய முயன்ற தாய் மறு பக்கம் என, எங்கே பார்த்தாலும் குடும்பச் சூழலின் காரணமாகக் குழந்தைகளைக் கொள்ள முயல்வது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை
 

எங்கே பார்த்தாலும் குடும்பச் சூழலின் காரணமாகக் குழந்தைகளைக் கொள்ள முயல்வது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

வறுமையால் குடும்பத்தைச் சமாளிக்க முடியாமல் போடிநாயக்கனூர் பகுதியில்  3 குழந்தைகளுடன் தானும் விஷம் அருந்திய தாய் ஒரு பக்கம், கடலூரில் குடும்பத் தகராறில் காரணமாகத் தனது மூன்று குழந்தைகளையும் கால்வாயில் வீசி தற்கொலை செய்ய முயன்ற தாய் மறு பக்கம் என, எங்கே பார்த்தாலும் குடும்பச் சூழலின் காரணமாகக் குழந்தைகளைக் கொள்ள முயல்வது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இதனைத்தொடர்ந்து, சென்னை கடற்கரை பகுதியில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் தனது 2 பிள்ளைகளுடன் சென்னை கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளார். குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். பொழுது சாய்ந்ததும், இருட்டி விடும் என்பதால் சுமார் ஒரு 7 மணி அளவில் பவித்ரா தனது இரு குழந்தைகளின் கழுத்தையும் கத்தியை வைத்து அறுத்துள்ளார். 

அதன் பிறகு, தானும் அறுத்துக் கொள்ள முயன்றுள்ளார். குழந்தைகள் இருவரும் ரத்தம் வழிய, வழியால் துடித்ததைக் கண்ட மக்கள் உடனே ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனையின் போது பவித்ராவின் ஒரு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்காக பவித்ரா ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், மற்றொரு குழந்தை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சென்னை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.