×

‘குடும்பம் நடத்த வராத மனைவி’.. ஆத்திரத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற கணவன்!

பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த இவர்கள், பெற்றோர்களின் சம்மதத்துடனே திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். கரூர் அருகே சேங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார்- மாயமணி மலர் தம்பதி. இவர்களுக்குக் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் ஆகியுள்ளது. பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த இவர்கள், பெற்றோர்களின் சம்மதத்துடனே திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும், திருமணம் ஆனதில் இருந்து இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்துள்ளது. அதனால், மலர் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விடுவாராம்.
 

பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த இவர்கள், பெற்றோர்களின் சம்மதத்துடனே திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்.

கரூர் அருகே சேங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  ராஜ்குமார்- மாயமணி மலர் தம்பதி. இவர்களுக்குக் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் ஆகியுள்ளது. பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த இவர்கள், பெற்றோர்களின் சம்மதத்துடனே திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும், திருமணம் ஆனதில் இருந்து இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்துள்ளது. அதனால், மலர் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விடுவாராம். 

அதே போலக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலர் அம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். மலர் இல்லாத துயரம் தாளாமல் தனது  மாமியார் வீட்டுக்கு சென்று பலமுறை அழைத்துள்ளார். ஆனால், மலர் வரவே இல்லையாம். அதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் அவர் வீட்டின் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின் கம்பியைத் 
 தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.