×

குடிப்பதற்கு இடையூறாக இருந்த கேமராவை உடைத்து கிணற்றில் வீசிய இளைஞர்கள்..!

பல்லாவரம், பொழிச்சலூரை சேர்ந்த மாதவன் குடிப்பதற்காகத் தனது 4 நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். நண்பர்கள் நாலு பேர் சேர்ந்தால் குடிப்பது வழக்கம் தானே. பல்லாவரம், பொழிச்சலூரை சேர்ந்த மாதவன் குடிப்பதற்காகத் தனது 4 நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். மது எல்லாம் வாங்கிக் கொண்டு, அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் ஓரம் அமர்ந்தது நண்பர்களுடன் குடிப்பது வழக்கமாம். அதே, போல நேற்று இரவு குடிக்க ஆரம்பித்துள்ளனர். சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் ,
 

பல்லாவரம், பொழிச்சலூரை சேர்ந்த மாதவன் குடிப்பதற்காகத்  தனது 4 நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார்.

நண்பர்கள் நாலு பேர் சேர்ந்தால் குடிப்பது வழக்கம் தானே. பல்லாவரம், பொழிச்சலூரை சேர்ந்த மாதவன் குடிப்பதற்காகத்  தனது 4 நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். மது எல்லாம் வாங்கிக் கொண்டு, அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் ஓரம் அமர்ந்தது நண்பர்களுடன் குடிப்பது வழக்கமாம்.

அதே, போல நேற்று இரவு குடிக்க ஆரம்பித்துள்ளனர். சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் , பல்லாவரம் முக்கியமான பகுதி என்பதால் அங்குக் கொஞ்சம் கேமராக்கள் அதிகமாகவே இருக்கும். மாதவன் அவர் நண்பர்களுடன் மது அருந்த வந்த கிணற்றின் அருகே 3 கேமராக்கள், அப்பகுதி காவலர்களால் பொருத்தப்பட்டிருந்தது.

மது அருந்தும் போது அதனைக் கண்ட மாதவனும் அவரது நண்பர்களும், அவர்கள் அங்கே குடிப்பது அந்த கேமராக்களில் பதிவானால் மாட்டிக் கொள்வோம் என்பதற்காக, அந்த கேமராக்களை உடைத்து அருகே இருந்த கிணற்றில் வீசியுள்ளனர். கேமராவை உடைக்கும் முன்னர் வரை அதில் பதிவாகியிருக்கும் என்பதை மறந்த இளைஞர்கள் கேமராக்களை உடைத்த பின்பு அங்கேயே அமர்ந்து குடித்து விட்டு பிறகு வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர், கேமராவை உடைத்த மாதவனைக் கைது செய்துள்ளனர். மேலும், மாதவனுடன் இருந்த 4 போரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.