×

கிருஷ்ணர் குழலூதுவது எதற்காக?

ஒரு நாள் ராதையின் தோழிகள் கிருஷ்ணனின் புல்லாங்குழலை பார்த்து, ‘மாதவன் உதடுகளில் எப்போதும் அமர்ந்திருக்க நீ என்ன புண்ணியம் செய்தாயோ? ஒரு நாள் ராதையின் தோழிகள் கிருஷ்ணனின் புல்லாங்குழலை பார்த்து, ‘மாதவன் உதடுகளில் எப்போதும் அமர்ந்திருக்க நீ என்ன புண்ணியம் செய்தாயோ? கிருஷ்ணரின் தேனூரும் உதட்டின் ருசியை எப்போதும் பருகுகிறாய். அவன் உன்னை வாசிக்கும்போது, உன் சொல்லுக்கு கட்டுப்பட்டவன் போல இயங்குகிறான். அவன் தன்னை மறந்து ஒற்றைக்காலில் நிற்கவும் செய்கிறாய். பூப்போன்ற அவனது கையில் உன்னை தூங்க
 

ஒரு நாள் ராதையின் தோழிகள் கிருஷ்ணனின் புல்லாங்குழலை பார்த்து, ‘மாதவன் உதடுகளில் எப்போதும் அமர்ந்திருக்க நீ என்ன புண்ணியம் செய்தாயோ?

ஒரு நாள் ராதையின் தோழிகள் கிருஷ்ணனின் புல்லாங்குழலை பார்த்து, ‘மாதவன் உதடுகளில் எப்போதும் அமர்ந்திருக்க நீ என்ன புண்ணியம் செய்தாயோ? கிருஷ்ணரின் தேனூரும் உதட்டின் ருசியை எப்போதும் பருகுகிறாய். அவன் உன்னை வாசிக்கும்போது, உன் சொல்லுக்கு கட்டுப்பட்டவன் போல இயங்குகிறான். அவன் தன்னை மறந்து ஒற்றைக்காலில் நிற்கவும் செய்கிறாய். பூப்போன்ற அவனது கையில் உன்னை தூங்க அனுமதிக்கிறான். அவனது சிவந்த உதட்டினால் உனக்கு தலையணை தருகிறான். அவனது விரல்களை உன் மேனியில் வருடி உன் பாதத்திற்கு சுகம் தருகிறான். அவனது அழகிய சுருண்ட முடி காற்றில் அசையும்போது உனக்கு விசிறவும் செய்கிறான்’ என்றார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணர் கைகளில் எப்பொழுதும் புல்லாங்குழல் தவழ்ந்துக் கொண்டிருப்பதற்கு மூன்று முக்கியமான காரணங்கள் இருக்கிறது.  புல்லாங்குழலில் எந்த பக்கமும் அடைப்பு இல்லை. இறுக்கமற்ற வெறுமையான இடமே அதனிடம் உள்ளது. இதன் மூலம் நாமும் இறுக்கமற்று அகங்காரம் இல்லாமல் இருக்கு வேண்டும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது. அதனால் மற்றவரிடம் உள்ள கோபத்தையும், பொறாமையையும் மனதில் அடைக்கலாகாது.

புல்லாங்குழலை, யாராவது வாசித்தாலொழிய அதிலிருந்து இனிமையான ஓசை எழாது. அதாவது நீங்கள் பேச அவசியமற்ற இடத்தில் பேசாமல் இருத்தல் நல்லது. நமது வார்த்தைகள் தான் உலகில் அதிக மதிப்புள்ளது. அதனால் தீய வார்த்தைகள் பேசுவதை விட அது மாதிரியான சமயங்களில், அமைதியாக இருப்பதே சிறந்தது.

 புல்லாங்குழலை வாசித்தால் இனிய இசையை மட்டுமே கொடுக்கும், இல்லையேல் ஓசையின்றி அமைதியாக இருக்கும். அதைப்போல நாம் பேசும் போது தீய சொற்கள் தவிர்த்து இனிய சொற்களை பயன்படுத்துவதே நலன் பயக்கும். புல்லாங்குழலில் இருக்கும் இந்த மூன்று குணங்கள் யாரிடம் உள்ளதோ அவர்களுக்கு இறைவன் தனது உதட்டில் இடம் கொடுப்பான். 

ஒரு சமயம் ராதையே நேரடியாக புல்லாங்குழலிடம், ‘அருமை குழலே! நான் கண்ணனை அளவு கடந்து விரும்புகிறேன். ஆனால், அவன் உன் மீது தான் பாசம் அதிகம் வைத்துள்ளான். அதனால், அவன் எப்போதும் அவனது உதட்டிலே உன்னை வைத்துக் கொள்கிறான். இதற்கு காரணம் என்ன? நீ கூறுவாயா?’ என்று கேட்டாள். அதற்கு குழல் சொன்னது, ‘முதலில் என் உடம்பை வெட்டி, அதிலிருந்து எனது இதயத்தையும் நீக்கி, என்னை வெறுமையாக்கினார்கள். என் மேனியெங்கும் துளைகளைப் போட்டார்கள். இவ்வாறு இருந்தும், நான் கிருஷ்ணரின் விருப்பத்திற்கு ஏற்பவே ஓசையைக் கொடுக்கிறேன். என் விருப்பத்திற்கு நான் என்றும் ஓசையை தந்ததில்லை. உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் இதுவே. நான் கிருஷ்ணரின் விருப்பம் போல நடக்கிறேன். நீங்களோ உங்கள் விருப்பத்திற்கு அவன் தலையசைத்து நடக்க ஆசைப்படுகிறீர்கள்’ என்றது. எதிர்பார்ப்பு இல்லாத பக்தி தானே சிறந்தது.