×

கடந்த 48 மணி நேரமாக எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது: சரண்

பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா உறுதியானதால், கடந்த 2 ஆம் தேதி அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு எக்ஸ்மோ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எஸ்பிபி விரைவில் குணமடைந்து மீண்டும் மக்களை மகிழ்விக்க வர வேண்டும் என கோடான கோடி மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 48 மணி நேரமாக எஸ்பிபி உடல்நிலை
 

பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா உறுதியானதால், கடந்த 2 ஆம் தேதி அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு எக்ஸ்மோ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எஸ்பிபி விரைவில் குணமடைந்து மீண்டும் மக்களை மகிழ்விக்க வர வேண்டும் என கோடான கோடி மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 48 மணி நேரமாக எஸ்பிபி உடல்நிலை சீராக இருப்பதாகவும், இது அவரது உடல்நிலை தேறி வருவதற்கான நல்ல அறிகுறி என்றும் எஸ்பிபி மகன் சரண் தெரிவித்துள்ளார். மேலும் எல்லோருடைய அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி என்றும் சரண் கூறியுள்ளார்.