×

ஏழைகளின் நலனுக்காக ஜெயலலிதாவின் சொத்துக்களை பயன்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை! ஆனா போயஸ் கார்டன் மட்டும் வேண்டும் – தீபா

ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பாக விளக்கமளிக்க தீபா மற்றும் தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர் ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பாக விளக்கமளிக்க தீபா மற்றும் தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர் சுமார் 1000 கோடி மதிப்புள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக்கோரி அதிமுகவை சேர்ந்த புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்தவழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மக்களால் நான்; மக்களுக்காகவே நான் என்ற ஜெயலலிதாவின்
 

ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பாக விளக்கமளிக்க தீபா மற்றும் தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்

ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பாக விளக்கமளிக்க தீபா மற்றும் தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்

சுமார் 1000 கோடி மதிப்புள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக்கோரி அதிமுகவை சேர்ந்த புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்தவழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

மக்களால் நான்; மக்களுக்காகவே நான் என்ற ஜெயலலிதாவின் சொத்துகளில் சிலவற்றை ஏன் ஏழைகளுக்கு வழங்க கூடாது என நீதிபதி கிருபாகரன் தீபக் மற்றும் தீபாவிடம் கேள்வி எழுப்பினர். ஏழைகளின் நலனுக்காக  ஜெயலலிதாவின் சொத்துகள் சில பகுதிகளை பயன்படுத்துவதில் எங்களுக்கு ஆட்சோபம் இல்லை.ஆனால் போயஸ் கார்டன் உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை  எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தீபக் மற்றும் தீபா தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். 

மேலும்  போயஸ் கார்டனில் தன்னை அனுமதிக்காதனாலேயே  ஜெயலலிதாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை என தீபா தெரிவித்தார். அதற்கு ஜெயலலிதா இறந்த உடனேயே சொத்துக்களுக்கு உரிமைக்கோரி ஏன் நீதிமன்றத்தை அணுகவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.