×

உங்களுடைய ஜாதகம் ராஜ யோக ஜாதகமா ?நீங்களே எளிதில் தெரிந்துகொள்ளலாம்!

ஜோதிடத்தில் ராஜயோகம் தரும் கிரகங்கள் எவை என்பதையும், அந்த கிரகங்கள் ஜாதகத்தில் எந்தந்த இடத்தில் இருந்தால் அவை எல்லாம் ராஜ யோகமாக கருதப்படும் என்பதை பற்றியும் இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம். மண்ணுலகில் பிறந்த மனிதர்களனைவரும் செல்வச் செழிப்புடன் வாழவே விரும்புகிறோம். ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே அப்படி செல்வத்துடனும் செல்வாக்குடனும் வாழும் வாழ்க்கை கிடைக்கிறது. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர். 3, 6, 8, 12ம்
 

ஜோதிடத்தில் ராஜயோகம் தரும் கிரகங்கள் எவை என்பதையும், அந்த கிரகங்கள் ஜாதகத்தில் எந்தந்த இடத்தில் இருந்தால் அவை எல்லாம் ராஜ யோகமாக கருதப்படும் என்பதை பற்றியும் இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்.

மண்ணுலகில் பிறந்த மனிதர்களனைவரும் செல்வச் செழிப்புடன் வாழவே விரும்புகிறோம். ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே அப்படி செல்வத்துடனும் செல்வாக்குடனும் வாழும் வாழ்க்கை கிடைக்கிறது.

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர். 3, 6, 8, 12ம் இடங்கள் மறைவு ஸ்தானம். 3ம் அதிபதி 6, 8, 12ம் இடத்திலோ, 6ம் அதிபதி 3, 8, 12ம் இடத்திலோ, 8ம் அதிபதி 3, 6, 12ம் இடத்திலோ, 12ம் அதிபதி 3, 6, 8ல் மாறி நின்றாலோ, 3, 6, 8, 12ம் அதிபதிகள் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனியாக இருந்து மறைந்தால் புகழுடன் கோடீஸ்வரராக வாழ்க்கை கிடைத்துவிடும். 

பாதகாதிபதி நீசம், வக்ரம் போன்று வலுவிழந்து தசை நடந்தாலும், ஜாதகரை கோடீஸ்வரராக மாற்றிவிடும். சுபகிரக,கேந்திர, திரிகோண அதிபதிகள் ராசியில் நீசம் பெற்று அம்சத்தில் பலம் பெற்றாலும், சுபயோக பலன்களையே தருவர்.

எல்லோர் வாழ்விலும் நல்ல நேரம் உண்டு. வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமலேயே தவறவிடுகின்றனர். அதிர்ஷ்டத்துக்காகக் காத்திருப்பது, ஏங்குவதைவிட அவரவர் ஜாதகத்தில் எந்த நேரத்தில், எந்தத் துறையில் ஈடுபட்டால் கோடீஸ்வரராக முடியும் என்பதைக் கண்டறிய வேண்டும்.

பல வருடங்கள் சேமித்த பொருளைக் கொண்டும், கடன் வாங்கியும் புதிய தொழில் தொடங்கும்போது, முதலில் ஜாதகத்தில் தொழில் தொடங்கும் நேரம் தற்போது உண்டா, தொழிலால் லாபம் கிடைக்குமா, கூட்டுத் தொழில் வெற்றி தருமா என்பதையெல்லாம் கருத்தில் கொள்வது பாதுகாப்பானது. 

அவர்களின் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு கிரகம் வலுப்பெற்று, அவருடைய தசாபுக்தி நடைபெறும்போது முன்னேற்றம் ஏற்படும். ஆனால், ஒரு சிலருக்கு திடீரென அவர்கள் நினைத்துப் பார்த்திடாதபடி ராஜயோகம் அமையப்பெறுவதையும் காணலாம். வித்யாதரன்,யோகக்காரகன் என்று போற்றப்படும் ராகு பகவான் செல்வத்தைக் கண்மூடித்தனமாக அள்ளித்தரும் அற்புத வள்ளல். 

அமுது உண்டதால் இறவா வரம் பெற்ற ராகு, மகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரியலானார். உடனே, மகாவிஷ்ணு அவர் முன் தோன்றி, ராகுவின் தவத்தைப் புகழ்ந்து, நவ கோள்களில் ஒருவனாக மனிதனின் சிரசும் (தலை), பாம்பின் உடலுடன் கருமை நிறம் கொண்டவராக இருந்து அருள்புரிய ஆணையிட்டார்.  

மேலும், தென்மேற்கு திசைக்கு அதிபதியாக, கிரகங்களில் பெண் கிரகமாகவும், நிறங்களில் கருமை நிறமாகவும் வடிவத்தில் உயரமானவனாகவும், கிரக அவயங்களில் தொடை, பாதம், கணுக்காலுக்கு உரியவராகவும், உலோகப் பொருளில் கருங்கல்லாகவும் இருக்கும் ராகுதான் அந்நிய பாஷை களுக்கும் காரகத்துவம் பெறுகிறார்.

ரத்தினங்களில் கோமேதகத்துக்கும், வஸ்திரங்களில் கருமை நிறத்துக்கும், வாகனங்களில் ஆடாகவும், சமித்தில் அருகாகவும், சுவையில் புளிப்பாகவும், உளுந்து அன்னத்தில் விருப்பம் கொண்டவராகவும், பஞ்ச பூதங்களில் ஆகாய கிரகமாகவும், நாடியில் பித்த நாடி உடையவராகவும் திகழ்கிறார்.

இவரின் அதிதேவதைகள் காளி, துர்கை, கருமாரியம்மன். குணங்களில் தாமஸ குணம் கொண்டவராகவும், திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதியாகவும் இருக்கிறார்.

ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சஞ்சரிக்கிறார்.இவரது தசாபுக்தி 18 ஆண்டுகளாகும். ராகுவைப் போல் கொடுப்பவரும் இல்லை. ராகுவைப் போல் கெடுப்பவரும் இல்லை என்று இவ்வுலகம் புகழ்ந்து போற்றும் படியாகச் செயல்படுபவர் ராகு மட்டுமே.

சாயா கிரகமான ராகு அனைத்து ஜீவராசிகளிலும் அருளாட்சி புரிந்துவருகிறார். எனினும், மானிடர்களாகிய நமக்கு அவரவர் லக்னப்படி சில இடங்களில் சாதாரண பலன்களும், சில இடங்களில் மிகப் பிரபலமான ராஜயோகத்தையும் அள்ளித் தருகிறார்.

ராகு தோஷமுள்ளவர்கள், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று பரிகார பூஜை செய்து வரலாம். ராகு காயத்ரி மந்திரத்தை காலை மாலை வேளைகளில் சொல்லி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

ராகு காயத்ரி மந்திரம்:

ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம அஸ்தாய தீமஹி