×

ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 13 பேர் குணமடைந்தனர்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் முழு குணம்பெற்று வீடு திரும்பினர். ஈரோடு மாவட்டத்தில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்து. இவர்களில் 4 பேர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஒருவர் திருச்சியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பெருந்துறையை சேர்ந்த 60 வயது முதியவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த 58 நபர்களில்
 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் முழு குணம்பெற்று வீடு திரும்பினர்.

ஈரோடு மாவட்டத்தில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்து. இவர்களில் 4 பேர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஒருவர் திருச்சியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பெருந்துறையை சேர்ந்த 60 வயது முதியவர் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த 58 நபர்களில் 13 பேர் குணமடைந்தனர். மேலும் கொரோனா உறுதியான 45 நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குணமடைந்து வீடு திரும்புபவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் மலர் கொத்துகளும் பழங்களும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் இருக்கவும், வெளி நபர்களை சந்திக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.