×

இளமதியை கடத்தியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு! 

திருமணத்திற்காக இளமதி என்ற பெண்ணை கடத்தியதாக செல்வன், கொளத்தூர் மணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வன் என்பவர், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இருவருக்கும், சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது
 

திருமணத்திற்காக இளமதி என்ற பெண்ணை கடத்தியதாக செல்வன், கொளத்தூர் மணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வன் என்பவர், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இருவருக்கும், சேலம் மாவட்டம் காவலாண்டியூரில்  திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

அப்போது அங்கு வந்த 40-க்கும் மேற்பட்டோர், திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலை கழக பிரமுகர் ஈஸ்வரன் மற்றும் காதல் ஜோடியை கடுமையாக தாக்கி, காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று ஈஸ்வரன் மற்றும் காதலர் செல்வனை மீட்டனர். ஆனால் இளம் பெண் இளமதியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் #இளமதி_ எங்கே என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. ஆனால் அவர் என்ன ஆனார் என்ற கவலை பலருக்கும் ஏற்பட்டது. இளமதி பற்றி நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பப்பட்டது. இந்நிலையில் சேலம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜராகியுள்ளார். தனது வழக்கறிஞர் சரவணன் உடன் அவர் ஆஜராகியுள்ளார். தன்னுடைய பெற்றோருடன் செல்ல விரும்புவதாக இளமதி தெரிவித்ததாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். 

இந்நிலையில் பெண்ணின் தாய் அளித்த புகாரின்பேரில் இளமதியை கடத்தியதாக செல்வன், கொளத்தூர் மணி உள்ளிட்ட 4 பேர் மீது ஈரோடு மாவட்டம் பவானி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்நிலையத்தில் இருந்த திராவிடர் விடுதலைக் கழக ஆதரவாளர்கல் இளமதியிடம் பேச முயன்றனர். ஆனால் தான் யாரிடமும் பேச விரும்பவில்லை என்றும், பெற்றோருடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.