×

ஆகம விதிகளை மீறி நடராஜர் கோயிலில் நடந்த ஆடம்பர திருமணம்: பட்டு தீட்சிதர் பணிநீக்கம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் பட்டு தீட்சிதர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் பட்டு தீட்சிதர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆண்டுதோறும் ஆனி மற்றும் மார்கழி மாதத்தில் நடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டுச் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்கள். இந்த மண்டபத்தில் தனியாருக்கு, திருமண நிகழ்ச்சி நடத்தவோ அல்லது விழாக்களை
 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் பட்டு தீட்சிதர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் பட்டு தீட்சிதர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆண்டுதோறும் ஆனி மற்றும் மார்கழி மாதத்தில்  நடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அபிஷேகம்  நடத்தப்பட்டுச் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்கள். இந்த மண்டபத்தில் தனியாருக்கு, திருமண நிகழ்ச்சி நடத்தவோ அல்லது விழாக்களை நடத்தவோ அனுமதி கிடையாது. 

ஆனால்  சிவகாசியைச் சேர்ந்த பிரபல பட்டாசு நிறுவனமான ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் அதிபர் ராஜரத்தினம் மகள் சிவகாமிக்கும் ரத்னா ஃபேன் ஹவுஸ் உரிமையாளர் மகன் சித்தார்த்தன் இருவருக்கும் ஆடம்பரமாகத் திருமணம் நடந்தது. இதன் காரணமாக ஆலய பொது தீட்சிதர்களிடம்  உத்தரவு பெற்று இந்த திருமணத்தை நடத்தி இருப்பதாகவும்,  ஆயிரங்கால் மண்டபத்தில் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் அங்கு திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் திருமணத்திற்கு வந்தவர்கள் ஆயிரங்கால் மண்டபம் வரை காலணி அணிந்து சென்றிருப்பதும், அலங்கார வேலைகளுக்காக தங்கத்தால் வேயப்பட்டுள்ள கூரையில் ஏறி அலங்கார பணிகள் நடந்துள்ளதும்  பக்தர்கள்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில்  பட்டு தீட்சிதர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக  இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நடராஜர் கோவில் பூஜை ஸ்தானிகரும், அறங்காவலருமான பட்டு தீட்சிதரோ, அவர் மகளுக்கு இக்கோவிலில் திருமணம் நடைபெற வேண்டும் என்பது நடராஜரின் அருள்’ என்று கூறி மேலும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.