×

அம்பேத்கர் சிலை உடைப்பு: 20 பேர் அதிரடி கைது!

வேதாரண்யம் கலவரத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் : வேதாரண்யம் கலவரத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் ராமகிருஷ்ண புரம் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காரை வழிமறித்து அவரை தாக்கியுள்ளனர். இதனால் இரு சமூகத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. காவல் நிலையம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
 

வேதாரண்யம் கலவரத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நாகப்பட்டினம் : வேதாரண்யம் கலவரத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் ராமகிருஷ்ண புரம் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காரை வழிமறித்து அவரை தாக்கியுள்ளனர். இதனால் இரு சமூகத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

காவல் நிலையம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. காவல் நிலையத்தில் 3 காவலர்கள் மட்டுமே இருந்ததால் அவர்களால் தாக்குதலைத்  தடுக்க முடியவில்லை. இந்த தகராறு கலவரமாக மாறியது. குறிப்பாக இந்த கலவரத்தில் ஒருதரப்பினர்  அம்பேத்கர் சிலையை உடைத்ததால் வேதாரண்யத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது.

இதையடுத்து உடைக்கப்பட்ட அம்பேத்கர்  சிலைக்கு  பதிலாக அரசு சார்பில்  புதிய சிலையானது இன்று காலை  வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பதற்றம் சற்று தணிந்துள்ளதால் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால்  எஸ்.பி ராஜசேகரன், தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் ஆகியோர் கலவரம் நடைபெற்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்நிலையில் இந்த கலவரத்தில் ஈடுபட்ட  56 பேரை விசாரித்த காவல்துறையினர் அதில் 20 பேரை கைது செய்துள்ளனர். அவர்களின்  மீது பொதுச்சொத்துக்குச் சேதம் விளைவித்தல், சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.