×

அந்நிய படையினரிடம் இருந்து மரகத சிலையினை காப்பாற்ற மன்னர் செய்த மகத்தான காரியம்! 

சித்தர் சண்முக வடிவேலர் வடிவமைத்த மரகத நடராஜர் சிலையின் மகத்துவங்கள் பற்றி பார்போம். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு அருகில் அமைந்துள்ளது மண்டபம் என்கின்ற சிற்றூர். பண்டைய காலத்தில் அந்தப் பகுதியில் மரைக்காயர் என்ற மீனவர் வறுமையின் பிடியில் இருந்து வந்தார். மரைக்காயர் வறுமையில் இருந்த பொழுதும் நம்பிக்கையுடன் உத்திரகோசமங்கை மங்களேஸ்வரரை தினமும் வழிபட்டு வந்தார். பாய்மரப்படகில் சென்று மீன் பிடித்து வந்து வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தார் அந்த மீனவர்.ஒரு சமயம் அவர் கடலில் மீன்
 

சித்தர் சண்முக வடிவேலர் வடிவமைத்த மரகத நடராஜர் சிலையின் மகத்துவங்கள் பற்றி பார்போம்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு அருகில் அமைந்துள்ளது மண்டபம் என்கின்ற சிற்றூர்.

பண்டைய காலத்தில் அந்தப் பகுதியில் மரைக்காயர் என்ற மீனவர் வறுமையின் பிடியில் இருந்து வந்தார். மரைக்காயர் வறுமையில் இருந்த பொழுதும் நம்பிக்கையுடன் உத்திரகோசமங்கை மங்களேஸ்வரரை தினமும் வழிபட்டு வந்தார். 

பாய்மரப்படகில் சென்று மீன் பிடித்து வந்து வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தார் அந்த மீனவர்.ஒரு சமயம் அவர் கடலில் மீன் பிடிக்கும்போது சூறாவளிக் காற்று அடித்து அவருடைய படகு நிலை குலைந்து எங்கேயோ அடித்து சென்று விட்டது. 

அப்படியே வெகுதூரம் போனபிறகு ஒரு பாசிபடிந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டது. பாறை அப்படியே சரிந்து படகிலே விழுந்து விட்டது.

 படகிலேயே இரண்டு சின்ன பாறைகளும் ஒரு பெரிய பாறையுமாக சிதறி கிடந்தது. அதுவரை அடித்துக் கொண்டிருந்த புயலும் மழையும் சற்றேன்று நின்று விட்டது.

மரைக்காயர் அதிர்ச்சியில் இருந்து மீண்டதும், மண்டபம் நோக்கித் திரும்பி வருவதற்கு பார்த்தால் அந்த இடத்தில் இருந்து திக்கும் திசையும் அவருக்கு தெரியவில்லை.

உத்திரகோசமங்கை மங்களேஸ்வரரை நினைத்து படகை செலுத்தி மிகவும் கஷ்டப்பட்டு பலநாட்கள் கடலில் திரிஞ்சலைந்து ஒருவழியாக மண்டபம் வந்து சேர்ந்தார்.

கடலுக்குப் போன இவர் திரும்பிவர வில்லை என்று பலநாட்கள் கவலையோடு காத்திருந்த குடும்பத்திற்கு அப்போது தான் நிம்மதி கிடைத்தது.

படகில் கொண்டு வந்த பாசிபடிந்த கற்களை என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டுப் படிக்கல்லாக போட்டு வைத்தார் மரைக்காயர்.

அந்த கல் மீது வீட்டுக்குள் போகும் பொழுதும் வருகின்ற பொழுதும் ஆட்கள் நடந்து நடந்து, மேலே ஒட்டி இருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி ஒரு நாள் சூரிய வெளிச்சத்தில் பளபள வென்று மின்னியது அந்த பாறை.

இந்த பாறை வறுமையான காலக் கட்டத்தில் இருந்து விடுபட கடவுள் அளித்த பரிசு என்பதை உணர்ந்த மரைக்காயர், மின்னும் பச்சைப் பாறையை அரசருக்கு அன்பளிப்பாகத் தந்தால் வறுமை நீங்கும் என்ற எண்ணத்தால் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார்.

நடந்த அனைத்தையும் விவரித்து தன் வீட்டில் ஒரு பெரிய பச்சைக் கல் உள்ளது என்று சொன்னார். அரண்மனை ஆட்கள் பச்சைப் பாறையை வீட்டில் இருந்து எடுத்து வந்து அரசரிடம் காட்டினார்கள். 

கற்களைப் பற்றி விவரம் உள்ள ஒருவர் பச்சைப் பாறையை சோதித்து பார்த்தார்.சோதித்தவர் ஆச்சரியத்துடன் இது விலை மதிக்கமுடியாத அபூர்வ மரகதக்கல், உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது என்று சொன்னார். 

உடனே மன்னரும் மரைக்காயருக்கு பச்சைப் பாறைக்கு உரிய பொற்காசுகளை அளித்து வழி அனுப்பினார். இவ்வளவு அருமையான கல்லில் ஒரு நடராஜர் சிலை செதுக்க வேண்டும் என்பது அரசரின் ஆசையாக இருந்தது. 

இந்த வேலைக்கு உகந்த சிற்பியை பல இடங்களில் தேடிக் கடைசியில் இலங்கை அரசன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிற்பியாக இருக்கும் சிவபக்தர் இரத்தின சபாபதியைப் பற்றிய விவரம் கிடைத்தது.

 அவரை அனுப்பி வைக்கும்படி பாண்டிய மன்னன் ஓலை அனுப்பினார். அதன் பின்னர் சிற்பியும் மன்னனை பார்க்க வந்து சேர்ந்தார். அவ்வளவு பெரிய மரகத கல்லை பார்த்த உடன் மயங்கியே விழுந்துவிட்டார் இலங்கையில் இருந்து வந்த சிற்பி .

அதுமட்டும் இல்லாது என்னால் மரகத நடராஜர் வடிக்க இயலாது மன்னா என்று கூறிவிட்டு இலங்கைக்கு சென்றார் அந்த சிற்பி.அதன் பின்னர் மன்னன் மன வருத்தத்துடன் உத்திரகோசமங்கை மங்களேஸ்வரர் சன்னதி முன் நின்று பிரத்தனை செய்துக் கொண்டிருந்தார்.

அப்போது ”நான் மரகத நடராஜர் வடித்து தருகிறேன் மன்னா” என்ற குரல் வந்தது ,குரல் வந்த திசை நோக்கி மன்னர் மற்றும் பிரஜைகள் அனைவரும் திரும்பியதும் ஆச்சரியத்துடன் ஒரு மாமனிதரை கண்டனர். அவர் வேறு யாரும் இல்லை.”சித்தர் சண்முக வடிவேலர்” தான்

 மன்னனின் கவலையும் நீங்கியது. மரகத நடராஜரை வடிக்கும் முழு பொறுப்பையும் சித்தர் சண்முக வடிவேலரிடம் ஒப்படைத்தார் மன்னர். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மன்னர் செய்து கொடுத்தார்.

அந்த பெரிய மரகத பாறையில் அஞ்சரை அடி உயர நடராஜரை ஒன்னரை அடி உயர பீடத்துடன் “ராஜ கோலத்தில்” மிகவும் நுணுக்கமாக மரகத நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்பு தெரியும் அளவிற்கு (பால் அபிஷேகத்தின் போது காணலாம்) வடித்தார் சித்தர் சண்முக வடிவேலர்.

பின்னர் மன்னரை அழைத்து முதலில் மூர்த்தியை (மரகத நடராஜரை) நிறுவி பின்னர் ஆலயம் அமைக்கும் படி அறிவுறை கூறினார்.

இதனால் மன்னர்கள், முகலாயர்கள், அந்நியர்கள் என பல படையைடுப்புகளை தாண்டி, இன்றும்  மரகத நடராஜர் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் திருநடனம் புரிகிறார்.

அவ்வாறு அவர் களவாடப்பட முடியாததற்குக் காரணம் நடராஜரை எப்போதும் சந்தனக் காப்பிலேயே வைத்திருந்தார் பாண்டிய மன்னன்.

அந்த நடைமுறை இன்றளவும் உத்திரகோசமங்கை திருத்தலத்தில் தொடர்ந்து கடைபிடிக்க பட்டு வருகிறது.

ஆனால் ஆனித் திருமஞ்சன நாளில், அதாவது ஆருத்ரா தரிசன நாளன்று மட்டும் தான் இந்த மரகத நடராஜரை, சந்தனக் காப்பின்றி அப்படியே ஒரிஜினலாக தரிசிக்க முடியும்.

மரகதக்கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீரும் என்பது நம்பிக்கை!