×

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை!

வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வந்தது. சென்னை: சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வந்தது. குறிப்பாக தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும், வடதமிழகத்திலும் ஆங்காங்கே ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. இதனை நிலத்தடி நீர் அளவு சற்று அதிகமாகியுள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு
 

வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாகவே  மழை பெய்து வந்தது.

சென்னை: சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாகவே  மழை பெய்து வந்தது. குறிப்பாக தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும், வடதமிழகத்திலும் ஆங்காங்கே  ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. இதனை நிலத்தடி நீர் அளவு சற்று அதிகமாகியுள்ளது. 

இந்நிலையில்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப் புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகம் மூட்டத்துடன் இருக்கும் என்றும் கனமழைக்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது. மேலும் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.