மலையடிப்பட்டியில் மணல் கடத்திய இளைஞர் கைது!
மணப்பாறை அருகே காட்டாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய இளைஞர் கைது செய்யப்பட்டார். மணல் ஏற்றப்பட்ட டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டி அருகே உள்ள டொம்பச்சி ஆற்றில் இன்று டிராக்டர் டிப்பரில் மணல் அள்ளப்படுவதாக வந்த தகவலின் பேரில் மணப்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டு அவ்வழியே வந்த டிராக்டரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் கல்கொத்தனூரை சேர்ந்த கிஷோர் சைமன் என்பது தெரியவந்தது.
Sep 8, 2020, 21:00 IST
மணப்பாறை அருகே காட்டாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய இளைஞர் கைது செய்யப்பட்டார். மணல் ஏற்றப்பட்ட டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டி அருகே உள்ள டொம்பச்சி ஆற்றில் இன்று டிராக்டர் டிப்பரில் மணல் அள்ளப்படுவதாக வந்த தகவலின் பேரில் மணப்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டு அவ்வழியே வந்த டிராக்டரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர் கல்கொத்தனூரை சேர்ந்த கிஷோர் சைமன் என்பது தெரியவந்தது. திருட்டுத்தனமாக ஆற்றில் மணல் அள்ளி வந்த டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்த போலீசார், அதன் ஓட்டுநர் சைமன் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.