×

“எத்தனை பேருடா என்னை கெடுத்திங்க..” -மயக்கம் தெளிந்ததும் அலறிய பெண்

கூல் ட்ரிங்க்ஸ் குடித்து மயங்கிய ஒரு பெண்ணை, மூன்று பேர் பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டனர் உத்தரபிரதேசத்தில் மீரட் மாவட்டத்தின் ரோஹ்தாவில் வசிக்கும் ஒரு அமர்பால் என்ற நபர் ரஸ்னா சாலையில் ஒரு ஹோட்டல் வைத்துள்ளார். ஹோட்டலின் முதல் தளத்தில், அமர்பாலின் மகனான உஜ்வால் ஒரு ஜிம் நடத்துகிறார்.கடந்த வெள்ளிக்கிழமை மாலை, உஜ்ஜாவலும் அவரது இரண்டு நண்பர்களும் ஒரு பெண்ணை அந்த ஹோட்டலுக்கு அழைத்து வந்தனர். பிறகு அவர்கள் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்
 

கூல் ட்ரிங்க்ஸ் குடித்து மயங்கிய ஒரு பெண்ணை, மூன்று பேர் பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டனர்


உத்தரபிரதேசத்தில் மீரட் மாவட்டத்தின் ரோஹ்தாவில் வசிக்கும் ஒரு அமர்பால் என்ற நபர் ரஸ்னா சாலையில் ஒரு ஹோட்டல் வைத்துள்ளார். ஹோட்டலின் முதல் தளத்தில், அமர்பாலின் மகனான உஜ்வால் ஒரு ஜிம் நடத்துகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை, உஜ்ஜாவலும் அவரது இரண்டு நண்பர்களும் ஒரு பெண்ணை அந்த ஹோட்டலுக்கு அழைத்து வந்தனர். பிறகு அவர்கள் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை வழங்கினர், பின்னர் ,அந்த பெண் அதை குடித்து மயங்கியதும் ,அவரை அந்த நணபர்கள் அனைவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். பிறகு அந்தப் பெண் சுயநினைவு பெற்றதும், அவர் தான் பலாத்காரம் செய்யப்பட்டதையுணர்ந்து அதிர்ச்சி அடைந்தார் .பின்னர் அவரின் உறவினர் ஒருவரை அழைத்து, தனக்கு நண்பர்களால் நேர்ந்த கொடுமை பற்றி அவரிடம் சொன்னார் .
உடனடியாக அந்த உறவினர் போலீசாருக்கு தகவல் கொடுத்து போலீசை கூட்டி கொண்டு சம்பவ இடத்திற்கு வந்தார். பின்னர் அந்த சம்பவ இடத்திலிருந்து ஜிம் உரிமையாளர் உஜ்வால் மற்றும் சத்வாய் கிராமத்தைச் சேர்ந்த சவுரப் என்ற இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், மூன்றாவது குற்றவாளியான மோனு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அந்த பெண்ணின் புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரோஹ்தா போலீசார் கூறினர். பின்னர் பாதிக்கப்பட்டஅந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அவரது வாக்குமூலமும் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.