×

‘கொரோனா சிகிச்சையில் கணவன்’..மது வாங்கி கொடுத்து மாட்டிக் கொண்ட மனைவி!

சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தற்போது கொரோனா சிறப்பு வார்டாக செயல்பட்டு வருகிறது. அதில் முத்துக்குமரன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு நோயாளிகளை உறவினர்கள் பார்க்க அனுமதிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த புதன் கிழமை முத்துக்குமரனை பார்க்க வந்த அவரது மனைவி, உணவு என்று கூறி ஒரு பையை அவரிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார். அவர் சென்ற சிறிது நேரத்தில் முத்துக்குமரன் சிகிச்சை மையத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன்
 

சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தற்போது கொரோனா சிறப்பு வார்டாக செயல்பட்டு வருகிறது. அதில் முத்துக்குமரன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு நோயாளிகளை உறவினர்கள் பார்க்க அனுமதிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த புதன் கிழமை முத்துக்குமரனை பார்க்க வந்த அவரது மனைவி, உணவு என்று கூறி ஒரு பையை அவரிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் முத்துக்குமரன் சிகிச்சை மையத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதனால் நோயாளிகள் அனைவரும் பதற்றம் அடைந்த நிலையில், அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததும், அவரது மனைவி தான் மது வாங்கிக் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசாரிடம் இது குறித்து அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.