×

தமிழகத்தில் மேலும் என்னென்ன தளர்வுகள்? முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து வரும் 28ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 28ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர்கள், மாலை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் . இதில் தியேட்டர்கள் திறப்பு, சென்னை புறநகர் ரயில் சேவை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் 31 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடியயுள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா காரணமாக கடந்த மார்ச்
 

தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து வரும் 28ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

28ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர்கள், மாலை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் . இதில் தியேட்டர்கள் திறப்பு, சென்னை புறநகர் ரயில் சேவை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் 31 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடியயுள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது . ஒவ்வொரு ஊரடங்கு நீட்டிப்பின் போதும் தளர்வுகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. கடைகள், பொது போக்குவரத்து, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மால்கள், கோயில்கள் போன்றவை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனாலும் பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. எனவே வரும் 28 ஆம் தேதி நடத்தவுள்ள ஆலோசனையில் கூடுதலாக பல தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிகிறது.