×

விருத்தாச்சலம் சிறை கைதி உயிரிழப்பு விவகாரம் : சிபிசிஐடிக்கு மாற்றம்!

விருத்தாசலத்தில் சிறை கைதி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் கைதாகி விருத்தாச்சலம் கிளை சிறையில் இருந்தவர் செல்வமுருகன். கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி நெய்வேலி பகுதியில் திருட்டு வழக்கில் கைதான இவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இதையயடுத்து செல்வமுருகன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். செல்வமுருகன் உடலில் காயங்கள் இருந்ததாகவும், தனது கணவரை போலீசார் அடித்து துன்புறுத்தியதால் தான் உயிரிழந்தார் என்று கூறி, அவரது மனைவி மற்றும்
 

விருத்தாசலத்தில் சிறை கைதி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் கைதாகி விருத்தாச்சலம் கிளை சிறையில் இருந்தவர் செல்வமுருகன். கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி நெய்வேலி பகுதியில் திருட்டு வழக்கில் கைதான இவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இதையயடுத்து செல்வமுருகன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

செல்வமுருகன் உடலில் காயங்கள் இருந்ததாகவும், தனது கணவரை போலீசார் அடித்து துன்புறுத்தியதால் தான் உயிரிழந்தார் என்று கூறி, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் காடாம்புலியூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் செல்வமுருகன் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. செல்வமுருகனை அடித்து கொன்றதாக எழுந்த புகாரின் எதிரொலியாக டிஜிபி திரிபாதி சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை பரிந்துரைத்துள்ளார்.