×

சீருடையுடன் பாரில் மது அருந்திய எஸ்எஸ்ஐ கோடீஸ்வரன் சஸ்பெண்ட்!

விருதுநகர் மாவட்டம் அமத்தூர் அருகே மதுபானக்கடை ஒன்று உள்ளது. அப்பகுதியில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் கோடீஸ்வரன் என்பவர் மது அருந்தியுள்ளார். காவலர் சீருடையுடன் அவர் மது அருந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சீருடையுடன் காவலர் கோடீஸ்வரன் மது அருந்தியது விருதுநகர் மாவட்ட எஸ்.பியின் கவனத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து எஸ்எஸ்ஐ கோடீஸ்வரனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி.பெருமாள் உத்தரவிட்டுள்ளார். சீருடையை அவமதிக்கும் விதமாக அவர் நடந்து கொண்டதால் இந்த நடவடிக்கை
 

விருதுநகர் மாவட்டம் அமத்தூர் அருகே மதுபானக்கடை ஒன்று உள்ளது. அப்பகுதியில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் கோடீஸ்வரன் என்பவர் மது அருந்தியுள்ளார். காவலர் சீருடையுடன் அவர் மது அருந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் சீருடையுடன் காவலர் கோடீஸ்வரன் மது அருந்தியது விருதுநகர் மாவட்ட எஸ்.பியின் கவனத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து எஸ்எஸ்ஐ கோடீஸ்வரனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி.பெருமாள் உத்தரவிட்டுள்ளார். சீருடையை அவமதிக்கும் விதமாக அவர் நடந்து கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.