×

அரசு அலுவலகத்தில் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் : பேரூராட்சி செயல்அலுவலர் பணி இடைநீக்கம்!

நடிகர் விஜய் 46வது பிறந்தநாளை கடந்த 22 ஆம் தேதி கொண்டாடினார். இதனால் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் , பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறினர். மேலும் அவரது ரசிகர்கள் எளிமையான முறையில் பிறந்தநாள் கொண்டாடினர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் அதன் செயல்அலுவலர் ராஜா தலைமையின்கீழ் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் களைகட்டியது. அரசு அலுவலகத்தில் தனிப்பட்ட நபர் அல்லது அரசியல் கட்சியினரின் பிறந்தநாளை கொண்டாட கூடாது என்பது வழக்கம். இதுவரை இதுபோன்ற
 

நடிகர் விஜய் 46வது பிறந்தநாளை கடந்த 22 ஆம் தேதி கொண்டாடினார். இதனால் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் , பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறினர். மேலும் அவரது ரசிகர்கள் எளிமையான முறையில் பிறந்தநாள் கொண்டாடினர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை  பேரூராட்சி அலுவலகத்தில் அதன் செயல்அலுவலர் ராஜா தலைமையின்கீழ் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் களைகட்டியது. அரசு அலுவலகத்தில் தனிப்பட்ட நபர் அல்லது அரசியல் கட்சியினரின் பிறந்தநாளை கொண்டாட கூடாது என்பது வழக்கம். இதுவரை இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாக கேள்விப்பட்டதில்லை. அதையெல்லாம் தாண்டி ஒரு பேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செயல்அலுவலர் ராஜா கேக் வெட்டி சக நண்பர்கள் அனைவருக்கும் ஊட்டிய படி கொண்டாட்டத்தில் திளைத்துள்ளார். இதற்கான வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.