×

“வானத்தைப் போல பரந்த மனம் கொண்டவர் விஜயகாந்த்” : தெலுங்கானா ஆளுநர் தமிழிசை புகழாரம்!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25-ம் தேதி வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் கடைப்பிடித்து வருகிறார்கள். விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் தமிழக பாஜக தலைவரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், “வானத்தைப் போல பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின்
 

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25-ம் தேதி வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் தமிழக பாஜக தலைவரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், “வானத்தைப் போல பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், மரியாதையையும் பெற்றவர் விஜயகாந்த் என்று பாராட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.