×

ஈரோடு- ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எஸ்பி யிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு

ஈரோடு செப் 4 – ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் ஈரோடு சம்பத் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் வந்து எஸ்பி தங்கதுரையை சந்தித்து மனு கொடுத்தனர் அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது :- ஈரோடு சம்பத் நகரைச் சேர்ந்த ஒருவர் சேர்ந்தவர் கடந்த 30 ஆண்டுகளாக ஏல சீட்டு நடத்தி வருகிறார்.5 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை பல்வேறு பிரிவுகளில் ஏல சீட்டு நடத்தி வந்தார் அவர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி
 

ஈரோடு செப் 4 –

ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் ஈரோடு சம்பத் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் வந்து எஸ்பி தங்கதுரையை சந்தித்து மனு கொடுத்தனர் அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது :- ஈரோடு சம்பத் நகரைச் சேர்ந்த ஒருவர்

சேர்ந்தவர் கடந்த 30 ஆண்டுகளாக ஏல சீட்டு நடத்தி வருகிறார்.5 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை பல்வேறு பிரிவுகளில் ஏல சீட்டு நடத்தி வந்தார் அவர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி நூற்றுக்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாய் வரை பணம் செலுத்தியுள்ளோம் தற்போது சீட்டு நிறைவடைந்த

நிலையில் பணம் கேட்டதற்கு திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் மேலும்.ஏலச்சீட்டு தொகையினை கொண்டு நகைகடை தொடங்கி உள்ளார் மனைவி பெயரில் செத்துகளை வாங்கியுள்ளார் எனவே அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை திருப்பி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்

செய்தி: அமுதினி